Wednesday, May 15, 2024
Home » கணவருக்கு மூளையில் ரத்த கசிவால் அதிர்ச்சி மகளின் கழுத்தை ெநரித்து கொன்று தாய் தற்கொலை: வடபழனி மருத்துவமனையில் சோகம்

கணவருக்கு மூளையில் ரத்த கசிவால் அதிர்ச்சி மகளின் கழுத்தை ெநரித்து கொன்று தாய் தற்கொலை: வடபழனி மருத்துவமனையில் சோகம்

by Dhanush Kumar

சென்னை மூளையில் ஏற்பட்டுள்ள ரத்த கசிவுக்காக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹெல்த் ெசன்டரில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து மனமுடைந்த தாய் ஒருவர் தனது 12 வயது மகளை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (42). இவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வெங்கட சுமலதா (34), மகள் மகான்னியா (12). மகள் ஓங்கோலில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி அரிகிருஷ்ணன் மளிகை கடையில் இருந்தபோது, திடீரென அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக மூளை செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே, அவரது மனைவி வெங்கடசுமலதா மற்றும் மைத்துனர் பிரசாத் ஆகியோர் ஆந்திராவில் இருந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹெல்த் சென்டருக்கு காரில் அழைத்து வந்து அனுமதித்தனர். மூளையில் ஏறப்பட்ட ரத்த கசிவு காரணமாக, அரிகிருஷ்ணன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, தன் சகோதரன் பிரசாத்திடம், கணவர் அரிகிருஷ்ணனை பார்த்து கொள்ளும்படி கூறினார். பின்னர் ஆந்திரா ெசன்று, கணவரின் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டு நேற்று காலை சென்னை திரும்பினார். தனது மகள் மகான்னியாவுடன் மருத்துவமனையில் உள்ள கணவரை பார்க்க வந்தார்.

அப்போது டாக்டர்கள் அரிகிருஷ்ணன் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், கணவர் அருகிலேயே உட்கார்ந்து சிறிது நேரம் அழுதுவிட்டு, தனியார் ஹெல்த் சென்டரில் உள்ள தங்கும் விடுதி அறைக்கு மகளுடன் சென்றார். மதியம் 12.30 மணிக்கு அறைக்கு சென்ற சகோதரி இன்னும் வரவில்லையே என்று சகோதரர் பிரசாத், அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் வெங்கட சுமலதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிரசாத், ஹெல்த் ெசன்டரில் பணியாற்றும் வார்டு பாய் வெங்கடேஷ் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வெங்கட சுமலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அருகில் உள்ள படுக்கையில் மகள் மகான்னியா கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த காட்சியை பார்த்து சகோதரர் பிரசாத் அதிர்ச்சி அடைந்து அழுது துடித்தார்.

இதுகுறித்து பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெங்கட சுமலதா மற்றும் மகான்னியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அரிகிருஷ்ணன் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் உயிர் பிழைப்பது கடினம் என்று தெரிந்ததால், அவர் இறப்பதற்கு முன்பாக தான் இறந்துவிட வேண்டும் என்று நினைத்து, தனது மகளையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. எனினும், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eighteen − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi