பெங்களூரு: பண மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடாருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. பல்வேறு வழக்குகளுக்காக கடந்த 34 மாதங்களாக பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில் 2021-ல் திருவனந்தபுரம் அருகே கோவளம் கடற்கரையில் வைத்து ஹரி நாடாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.