புதுடெல்லி: கடந்த 2004 ம் ஆண்டு ஒன்றிய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்த போது ரயில்வேயில் குருப் டி பதவிகளுக்கு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்கள் தங்களுடைய நிலத்தை லாலு பிரசாத்தின் குடும்பத்துக்கு மாற்றம் செய்துள்ளனர். அதிக விலை மதிப்புடைய நிலங்களை குறைந்த விலைக்கு விற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இதில், லாலு பிரசாத்துக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகள்களான மிசா பாரதி, சந்தா மற்றும் ராகினி ஆகியோரின் வாக்குமூலங்களை ஏற்கனவே அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தேஜஸ்வியை நாளையும்(22ம் தேதி),லாலு பிரசாத்தை வரும் 27ம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.