விழுப்புரம் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் எந்த பதவியிலும் சுகம் காணாதவன். எந்த பதவிக்கும் செல்லமாட்டேன். சத்தியம் செய்துவிட்டேன். நான் நினைத்திருந்தால் எம்.பி, அமைச்சர், குடியரசு தலைவர் என பதவி வந்திருக்கும். எனக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்போவதாக கூறினார்கள். ஆனால் எனக்கு மக்கள் மனதில் இடம் இருந்தால் போதும் அதுதான் பெரியது என்று கூறிவிட்டேன். பெண் பிள்ளைகளை பெண் தெய்வம் என்று கூறவேண்டும். உலக தலைவர்களே கண்டு வியக்கும் பரிசுத்தமான, துரும்பு அளவுக்கு கூட தவறு செய்யாத, அன்புக்கு இலக்கணமானவர் பிரதமர் மோடி’ என்றார். பாஜவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து பாஜவுக்கு 0 மார்க் தருவேன் என்றவர் ராமதாஸ். ஆனால், இன்று கூட்டணி வைத்ததால் அப்படியே அந்தர் பல்டி அடித்து மோடியை பாராட்டி தள்ளுகிறார்.