பெங்களூரு : பெங்களுருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததோடு, பிரதமர் கடந்த மாதம் திறந்து வைத்த மெட்ரோ நிலையம் ஒரு மணி நேர மழைக்கே தத்தளித்தது. கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சிறிய மழைக்கே நகர சாலைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. நேற்று மாலை பெய்த கனமழையால் பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.ஒயிட்பீல்டு- கேஆர் புரம் மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் திறந்து வைத்த நிலையில், அதற்குட்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு மணி நேர மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களின் மேல் கூரைகளில் இருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் நடந்து செல்லும் பாதையில் நீர் தேங்கியது. மெட்ரோ ரயில் ஊழியர்கள் வாலிகளை கொண்டு தண்ணீரை இறைக்கும் பணியில் இறங்கினர்.கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்பது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது. அதே போல தேர்தலை கருத்தில் கொண்டு நிறைவு பெறாத திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வரக்கூடிய இலையில் நிலையில், புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ நிலையம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.