சென்னை: முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் மதம், கடவுள்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது தேர்தல் சட்டப்படி குற்றம். மதம், கடவுள்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்புகள் வெளிவந்ததுண்டு. பிரதமர் மோடி மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் நீதிமன்றத்துக்கும், மக்கள் மன்றத்துக்கும் செல்ல முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.