அரியலூர்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வியூகம் மோடி, அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் பிடிக்கும் இட்லி பிடிக்கும் என்ற மோடியின் நாடகம் திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே. திமுக தேர்தல் நேரக் கட்சியல்ல; தமிழ் இனத்தின் காப்பாளர்; தேசத்தை காப்பாற்றும் கட்சி என குறிப்பிட்டார்.