சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன, பல அமைப்புகள் விசாரித்துவிட்டன. நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார். சிறப்பு புலனய்வு குழு விசாரணையில் திருப்தி, நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் என மனுதாரர் தெரிவித்தார்.