சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டு வர, உடனடியாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், ஒடிசா மாநிலத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை நேரடியாக பார்வையிடுகிறோம். அங்கு சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.