சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையாக வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொரு விவசாயியும் ஆவினுக்கு வழங்கும் பாலுக்கு, லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.3 கிடைக்கும். எனவே அனைவர் சார்பிலும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.