சென்னை : கடந்த 15ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில்தான் டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் பேட்டி அளித்த அவர், “மழைக்கால நோய்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை என சிலர் சித்தரிக்கின்றனர். கவனக்குறைவாக பணியாற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.