Wednesday, May 15, 2024
Home » பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்

பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்

by Porselvi

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, இன்று (23.01.2024) போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு ஆகியோர் முன்னிலையில், மாநகர் போக்குவரத்துக் கழக பட்டினப்பாக்கம் பணிமனையினை திறந்து வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 16 வாரிசுதாரர்களுக்கு
(2 ஓட்டுநர் மற்றும் 14 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநருடன் நடத்துநர்களை பணி நியமனங்கள் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்தையில் பே-மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவர்த்துக் கழகங்களுக்கு 1,666 பேருந்துகளை புதியதாக வாங்கிட அரசாணை வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்கள். மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் (KFW) நிதி உதவியுடன் 2,213 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளது என தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கிஸ் இ.ஆ.ப., அவர்கள், இணை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன் அவர்கள், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

12 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi