டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.