சென்னை : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் கூறப்படுகிறது. வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்.