சென்னை : தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (ம) உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் (ம) புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. அதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாகத் திகழ வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் அறிவுரை வழங்கினார்.