சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது வரும் 11, 12ம் தேதியில் விசாரணை நடத்தப்படும் என்று ஐகோர்ட் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? போலீஸ் காவல் சட்டவிரோத காவலா என்பது பற்றி விசாரிக்கலாம். சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா முடியாதா என்பதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.