உத்தரகாசி: சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் மண் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தொடர்ந்து 100 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி நடந்து வருகிறது. விரைவில் 40 பேரும் மீட்கப்படுவார்கள்” என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.