மதுரை: மிக்ஜாம் புயலும் பெருமழையும் தமிழ்நாட்டின் 2 முனைகளை புரட்டிப் போட்டிருக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். விவசாயம், வேலை இழப்பு, கால்நடைகள் இறப்பு, வாழ்விட இழப்பு என உயிரை பிடுங்கிச் சென்றது அந்த பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினோம். நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை, எங்களின் உரிமையை தாருங்கள் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.