சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மேல்வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்(20). இவர் நடிகர் விஜய்யின் கட்சியில் அப்பகுதியின் கிளை பொறுப்பாளராக உள்ளார். அதேபோல் கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அதே கட்சியில் மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை அஜீத் சேர்த்து வந்துள்ளார். இதையறிந்த ஏழுமலை, ‘கட்சியில் சேர்க்கப்படும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை என் மூலமாகத்தான் அவர்களுக்கு வழங்க வேண்டும்’ என அஜீத்திடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது தரப்பினர் நேற்று முன்தினம் இரவு அஜீத்தின் வீட்டிற்கு சென்று ஜன்னல் கண்ணாடி,பைக்கை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.