திருவொற்றியூர்: சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில், திருவொற்றியூர் தொகுதி பாக முகவர்கள், பிஎல்ஏ 2, வார்டு செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் தலைமையில், திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் நடந்தது. மண்டலகுழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்து கொண்டு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியடையவும், இல்லம்தோறும் முதல்வர் ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரங்களை வீடுகள்தோறும் கொண்டு சென்று சேர்த்து திமுக அரசு செய்த மக்கள் நல திட்டங்களை எடுத்துரைத்து திண்ணை பிரசாரம் மேற்கொள்ளவேண்டும் என கூறி தொண்டர்கள் ஆற்ற வேண்டிய பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில், கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, தொகுதி பார்வைாளளர் தசரதன், பகுதி செயலாளர்கள், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், வை.ம.அருள்தாசன், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் லயன் வீ.தியாகராஜன், நிர்வாகிகள் ராமநாதன், ஆனந்தன், எம்.வி.குமார், பிரபாவதி, கே.பி.சொக்கலிங்கம், கேபிள் டிவி ராஜா, தமிழ்ச்செல்வன், கார்த்திக், கோமலவள்ளி, சதீஷ்குமார், எம்.எல்.சரவணன், மணிகண்டன், சிவக்குமார், கவுன்சிலர்கள் தமிழரசன், சுசிலா ராஜா, பானுமதி சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.