மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம்பெறச் செய்தது நீதிமன்றத்துக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது எனவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.