மதுரை: மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. மதுரை மாநகராட்சில் இருக்க கூடிய தனியார் மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியில் தொடர்ச்சியாக மருத்துவக்கழிவுகளை கொட்டிவருவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மதுரை மாநகராட்சி நகர அலுவலர் வினோத் குமார் தலைமையில் இன்று காலை மதுரையில் பல்வேறு பகுதிகளில் இருக்க கூடிய மாநகராட்சி குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசரடி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனை ஒன்றில் மிகவும் ஆபத்தான மருத்துவ கழிவுகள் மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது. ஏறத்தாழ 50க்கும் மேற்ப்பட்ட ரத்தம் கசிந்திருக்கக்கூடிய சிரஞ்சிகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள், அதே போல் மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள், பில்கல் போடப்பட்டுள்ளன.
மேலும் மாநகராட்சி குப்பைத்தொட்டியில் மருத்துவ கழிவுகளை போட்டிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கழிவுகளை பறிமுதல் செய்து மாநகராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு அபராதம் விதித்துள்ளனர். தூய்மைப்பணியாளர்கள் கழிவுகளை எடுக்கும் போது அவர்களுக்கு சிரஞ்சி குற்றி நோய் தொற்றுகள் ஏற்படம் அதீத வாய்ப்புகள் இருப்பதாக நகர அலுவலர் தெரிவித்தார். இந்நிலையில் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடிய மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.