சென்னை: மருத்துவ கலந்தாய்வை மாநில அரசுகளே நடத்தலாம் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது எனவும் பேட்டி அளித்துள்ளார்.