சென்னை: மதிமுகவை தாய் கட்சியான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்று சு.துரைசாமி தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். 30 ஆன்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் ஏமாற்றாதீர் என்று துரைசாமி கூறியுள்ளார்.