Friday, May 17, 2024
Home » மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை: வனத்துறையினர், போலீசார் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை: வனத்துறையினர், போலீசார் நேரில் ஆய்வு

by Karthik Yash

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. வேட்டையாடப்பட்ட ஆட்டின் பாகங்களை வனத்துறையினர், போலீசார் நேரில் பார்வையிட்டனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் புதன்கிழமை அன்று நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர் டேனியல் ஜோசப் தலைமையிலான வன அலுவலர்கள் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் வலைகளை எடுத்து வந்து செம்மங்குளம் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனாலும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே யாரும் வர வேண்டாம் என்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாடுவதையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி,

புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி. அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல் கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி பிடிப்பதற்கு வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இச்சிறுத்தை புலி பிடிக்கப்படும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஆதலால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று சித்தர்க்காட்டில் உள்ள தண்டபாணி செட்டி தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த ஆட்டை நேரில் பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ், மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு உள்ளிட்ட இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறை கண்காணித்து வந்தனர். இன்று மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. வேட்டையாடப்பட்ட ஆட்டின் பாகங்களை வனத்துறையினர், போலீசார் நேரில் பார்வையிட்டனர்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi