மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 6வது நாளாக நீடிக்கிறது. மயிலாடுதுறை நகரில் இருந்து நகர்ந்து 22 கி.மீ. தொலைவில் சிறுத்தை முகாமிட்டுள்ளது. காஞ்சிவாய் என்ற இடத்தில் சிறுத்தை தென்பட்டதால் அங்கு வனத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுத்தை கால் தடத்தை கண்டறிவதில் நிபுணர்களான பொம்மன், காலனுடன் இணைந்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 15 இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.