சென்னை: மே தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர்களுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களை மே தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம். உழைப்பாளர்களின் உரிமையை பாதுகாக்க, ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.