Wednesday, May 22, 2024
Home » திருமண வாழ்க்கை 9 மாதத்தில் கசந்தது கழுத்தை அறுத்து மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

திருமண வாழ்க்கை 9 மாதத்தில் கசந்தது கழுத்தை அறுத்து மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

by Arun Kumar

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள அனந்தாவூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (30). இவருக்கும் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியை சேர்ந்த ரேவதி (24) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் பெற்றோர் வீட்டுக்கு ரேவதி சென்று விட்டார். அதனால் கணேஷ் தவித்தார். இந்நிலையில், மனைவியை காணவில்லை என பத்தனாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். பெற்றோர் வீட்டில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவாகரத்து வேண்டும் என்பதில் ரேவதி உறுதியாக இருந்தார்.

அதற்கு கணேஷும் சம்மதித்தார். இதையடுத்து இருவரும் இன்ஸ்பெக்டரிடம் எழுதி கொடுத்து விட்டு சென்றனர். ரேவதியை பின் தொடர்ந்து சென்ற கணேஷ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து அலறியபடி கீழே விழுந்தார். பின்னர் கழுத்தை அறுத்தார். அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதியினர் ஓடி வந்தனர். கணேஷை மடக்கி பிடித்து பத்தனாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ரேவதியை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi