துர்க்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மனோஜ் ராஜ்புத். இவர் தன் நெருங்கிய உறவு பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றி கடந்த 13 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 29 வயது பெண் கடந்த 22ம் தேதி துர்க் மாவட்டம் பழைய பிலாய் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மனோஜ் ராஜ்புத் நேற்று கைது செய்யப்பட்டார்.
திருமண ஆசைகாட்டி பலாத்காரம் பிரபல நடிகர் கைது
previous post