Wednesday, May 22, 2024
Home » திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு வாலிபர் எஸ்கேப்

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு வாலிபர் எஸ்கேப்

by MuthuKumar

பெரம்பூர்: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு வாலிபர் எஸ்கேப் ஆகிவிட்டார். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண். இவர் பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். இவரது தோழி மூலம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சத்தியவாணி முத்துநகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். இதையடுத்து அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டதுடன் இளம்பெண்ணுடன் பேசுவதையும் வாலிபர் தவிர்த்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்ததில், விக்னேஷ் இளம்பெண்ணை ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து விக்னேஷை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

9 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi