மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் தம்மெங்லாங் என்ற இடத்தில் இன்று மதியம் 2.23 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான லேசான நிலநடுக்கம், மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூரின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் கூற்றுப்படி,
வடக்கு மணிப்பூரின் மலைப்பகுதியான தமெங்லாங் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது என மணிப்பூரின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்செதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் மேற்பரப்பில் இருந்து பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
வடக்கு மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் மற்றும் நாகாலாந்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மார்ச் 15 அன்று இதேபோன்ற ஏற்பட்ட லேசான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்திலும் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
மலைப்பாங்கான வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலவும் நிலநடுக்கங்கள், அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.