டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக டெல்லியில் ஒன்றிய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மாநில, ஒன்றிய அரசுகள் திணறி வரும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்றுள்ளார்.