கென்யா: கென்யாவில் நடைபெற்ற கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கென்யா தலைநகர் நைரோவில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். கரடு முரடான பாதைகளில் புழுதிகளுக்கு நடுவே கார்களில் சீறி பாய்ந்த வீரர்கள் இலக்கை அடைய போட்டி போடு சென்றனர்.
மேடு பள்ளங்களில் கார்கள் அந்தரத்தில் பறந்து சென்றதை பார்வையாளர்கள் வியப்போடு கண்டுரசித்தனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்தயத்துறதை உலகின் முன்னணி வீரர் டானக் அடைந்து முதலிடத்தை பிடித்தார். புழுதி, சேறு, சகதியில் பாய்ந்து சென்ற பந்தைய வீரர்களின் சாகசம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.