திண்டுக்கல்: மணப்பாறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; சிலருக்கு உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும். முதலமைச்சர் சொன்னதை செய்வார். மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பே இல்லை என்று அவர் பரப்புரையில் கூறினார்.