Sunday, September 1, 2024
Home » அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை

by Ranjith

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திருமணி கோழிப்பண்ணை குடியிருப்பு பகுதியில் நேற்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது. ஏதேனும் ஆடு, மாடு அல்லது நாய் இறந்து கிடக்கிறதா என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், எந்த தடயமும் கிடைக்கவில்லை. இறுதியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அப்பகுதி மக்கள், மருத்துவமனை வளாகத்தினுள் சென்று பார்த்தபோது, அங்குள்ள குப்பை மேட்டில் ஆண் சடலம் கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் வந்த காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபருக்கு 55 வயது இருக்கும் என்பதும், அவர் 3 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

13 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi