மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், மாமல்லபுரம் பேரூராட்சியில் புதிதாக சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், பேவர் பிளாக் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், பைப் லைன் உடைப்பை சரி செய்தல், மழைநீர் கால்வாய் தூர்வாரி மட்டம் உயர்த்தி சிலாப் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
previous post