டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, அதிகபட்ச இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதற்கும் ஒப்புதல் பெறப்படுகிறது.