மாலே: மாலத்தீவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் இந்தியாவுக்கு ஆதரவாளராக கருதப்படும் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அதேபோல் மற்றொரு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான முகமது முயிஸ், தேர்தலில் வெற்றிபெற்றால் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை அகற்றி நாட்டின் வர்த்தக உறவுகளை சமநிலைப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார். இவர் சீனாவின் ஆதரவாளராக கருதப்படுகிறார்.