சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கன்டோமினியம் குடியிருப்பில் இந்திய குடும்பத்தினராக ஷர்மா மற்றும் அவரது மனைவி மோனிகா சர்மா வீட்டிற்கு இந்தியாவில் இருக்கும் ஏஜென்ட் மூலமாக 25வயது இளம்பெண் வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் மோனிகா, இளம்பெண் வேலையில் அதிருப்தி அடைந்த மோனிகா அவரது முகத்தில் குத்தியுள்ளார். இதில் பணிப்பெண்ணின் முகம் வீங்கியுள்ளது. மேலும் அவர் முகத்தின் மீது வீட்டின் உரிமையாளர் மோனிகா வாந்தி எடுத்து வீசியதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து புகைப்படம் எடுத்து அந்த பெண் தனது ஏஜென்டுக்கு அனுப்பிய நிலையில் அவர் இது குறித்து சிங்கப்பூரில் இருக்கும் அவரது நண்பர்களுக்கு தெரியப்படுத்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 16 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 23ம் தேதி அவர் தாமாக சரண் அடைந்து தண்டனையை அனுபவிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பணிப்பெண்ணுக்கு அடி உதை இந்திய பெண்ணுக்கு 16 வாரம் சிறை
previous post