மும்பை: மகாராஷ்டிரா, ராய்காட் மாவட்டம், மகாட் எம்ஐடிசி தொழிற்பேட்டையில் மருந்து பொருள்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது. ஆலையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில்,பேரல்களில் வைக்கப்பட்டிருந்த ரசாயனத்தில் தீ பரவி பயங்கரமாக வெடித்து சிதறின. இதில் ஆலையில் இருந்த 11 பேர் காணாமல் போயினர். நேற்று 8 பேர்உடல்கள் மீட்கப்பட்டன..மேலும் காணாமல் போன 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.