Tuesday, June 18, 2024
Home » மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. 13ம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 14ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை பெண்களுருவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

14/10/2023 (சனிக்கிழமை) 13/10/2023 மகாளய அமாவாசையை முன்னிட்டு அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதன்படி வருகின்ற 14/10/2023 அன்று மகாளய அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் வருகின்ற 13/10/2023 வெள்ளி கிழமை அன்று சென்னை ,சேலம் .கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 14/10/2023 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை ,சேலம் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi