சென்னை: மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் சாலையில் விரிசலுடன் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரவாயிலில் இருந்து வளசரவாக்கம் போரூர் செல்லும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்தனர். பள்ளம் பெரிதாகி விரிசலடைந்தால் போக்குவரத்து துண்டிக்கப்படும் என்பதால் சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.