மதுரை: மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டிய மரங்களுக்கு ஈடாக 2,300 மரக்கன்றுகள் நட உறுதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. வெட்டிய 800 மரங்களுக்கு ஈடாக 8,000 மரக்கன்றுகள் நடக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.