புதுடெல்லி: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனை அமைக்கும் பணி தொடர்பான டெண்டர் சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உள்ளது. அந்த நிறுவனம் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளது. எனவே அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ”எய்ம்ஸ் பணிகளுக்கு தடை விதிப்பது என்பது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களை பாதிக்கும். அதுபோன்று செய்ய முடியாது. சிபிஐ விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்றத்தை முறையிடலாம் என தெரிவித்த நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.