சென்னை: மதுரை அருகே நடந்த ரயில் தீ விபத்து தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். மதுரையில் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து ஏற்பட்டு 10 பேர் பலியாகினர்.