மதுரை: மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடய அறிவியல் துறையின் பேராசியர்கள் சந்திரசேகரன், சதாசிவம் தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது. பயண பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.