மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு, இந்த வருடமும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.