மதுரை: மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக 20 நபர்களிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி கூறியுள்ளார். சிலிண்டர்தான் தீ விபத்திற்கு பிரதான காரணமாக இருந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்தார்.