சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மதுரை முன்னாள் உதவி காவல் ஆணையருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மே 15ம் தேதிக்குள் சரணடையவும் முன்னாள் உதவி காவல் ஆணையர் வசந்தகுமார்க்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.