மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றிபெறும் காளைகள், வீரர்களுக்கு தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.